பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஆர்.வி.உதயகுமார் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | ராஜகுமாரன் |
Table of Contents
Ennavendru Solvathamma Song Lyrics in Tamil
-BGM-
ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை…
ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
என் நெஞ்சில் நிலைத்தவளை…
நான் என்னென்று சொல்வேனோ…
அதை எப்படிச் சொல்வேனோ…
ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா…
இந்த பூலோகம் பாராத தேன் நிலா…
ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை…
ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
என் நெஞ்சில் நிலைத்தவளை…
நான் என்னென்று சொல்வேனோ…
அதை எப்படிச் சொல்வேனோ…
-BGM-
ஆண் : தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களும்…
பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி கருங்கூந்தலோ…
முத்தாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்பிறை…
முத்தாரம் நீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை…
ஆண் : வண்ணப் பூவின் வாசம்…
வந்து நேசம் பேசும்…
அவள் நான் பார்க்க தாங்காமல் நாணுவாள்…
புதுப் பூக்கோலம்தான் காலில் போடுவாள்…
ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை…
ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
என் நெஞ்சில் நிலைத்தவளை…
நான் என்னென்று சொல்வேனோ…
அதை எப்படிச் சொல்வேனோ…
ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா…
இந்த பூலோகம் பாராத தேன் நிலா… ஆஹாஹா…
-BGM-
ஆண் : ஆஹா… கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள்…
முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள்…
ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்…
நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்…
ஆண் : அதிகாலை ஊற்று…
அசைந்தாடும் நாற்று…
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்…
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்…
ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை…
ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
என் நெஞ்சில் நிலைத்தவளை…
நான் என்னென்று சொல்வேனோ…
அதை எப்படிச் சொல்வேனோ…
ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா…
இந்த பூலோகம் பாராத தேன்நிலா…
ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை…
ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
என் நெஞ்சில் நிலைத்தவளை…
நான் என்னென்று சொல்வேனோ…
அதை எப்படிச் சொல்வேனோ…
Notes : Ennavendru Solvathamma Song Lyrics in Tamil. This Song from Rajakumaran (1994). Song Lyrics penned by R. V. Udayakumar. என்னவென்று சொல்வதம்மா பாடல் வரிகள்.