குருமுகில் பாடல் வரிகள் – Kurumugil Song Lyrics in Tamil

kurumugil-song-lyrics-in-tamil

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசாய் விக்னேஷ்விஷால் சந்திரசேகர்சீதா ராமம்

Kurumugil Song Lyrics in Tamil


-BGM-

ஆண் : குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார்…
மழைகொண்டு கவிதை தீட்டினார்…
இளம்பிறையினை இதழ் இடையினில் யார் சூட்டினார்…
சிரித்திடும் சிலையை காட்டினார்…

ஆண் : எறும்புகள் சுமந்து போகுதே சர்க்கரை பாறை ஒன்றினை…
இருதயம் சுமந்து போகுதே இனிக்கிற காதல் ஒன்றினை…
என் சின்ன நெஞ்சின் மீது இன்ப பாரமே ஏற்றி வைத்ததார்…

குழு (பெண்கள்) : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா…
வானோடு தீட்டி வைத்ததார்…
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே…
நிலாவை கூட்டி வந்ததார்…

-BGM-

ஆண் : கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு…
எழுதா ஓர் உவமை நீ…
வர்ணம் சேர்க்கும்போது வர்மன் போதை கொள்ள…
முடியா ஓவியமும் நீ…

ஆண் : எல்லோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும்…
உயிரே இல்லாத கல்கூட காமமுறும்…
உன் மீது காதல் கொண்ட மானுடன்தான் என்ன ஆகுவான்…

குழு (பெண்கள்) : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா…
வானோடு தீட்டி வைத்ததார்…
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே…
நிலாவை கூட்டி வந்ததார்…

-BGM-

ஆண் : உடையால் மூடி வைத்தும் இமைகள் சாத்தி வைத்தும்…
அழகால் என்னை கொல்கிறாய்…
அருவி கால்கள் கொண்டு ஓடை இடையென்றாகி…
கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்…

ஆண் : கடலில் மீனாக நானாக ஆணையிடு…
அலைகள் மீதேறி உன் மார்பில் நீந்தவிடு…
பேராழம் கண்டுகொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டும்…

ஆண் & குழு (பெண்கள்) : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா…
வானோடு தீட்டி வைத்ததார்…
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே…
நிலாவை கூட்டி வந்ததார்…


Notes : Kurumugil Song Lyrics in Tamil. This Song from Sita Ramam (2022). Song Lyrics penned by Madhan Karky. குருமுகில் பாடல் வரிகள்.



Source link

Spread the love

Leave a Comment